» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்

சனி 9, டிசம்பர் 2023 3:59:44 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைந்து 31.12.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்யவிருக்கும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை 08.12.2023 அன்று நடத்தியது. இக்கல்லூரியை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். 

கல்லூரி முதல்வர் (பொ) ந.வ. சுஜாத்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அவர் தம் உரையில் தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் கோபால், புதிய வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் பெயர்களைசேர்ப்பது குறித்து விளக்கமளித்தார்.  கல்லூரி உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory