» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்
சனி 9, டிசம்பர் 2023 3:59:44 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைந்து 31.12.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்யவிருக்கும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை 08.12.2023 அன்று நடத்தியது. இக்கல்லூரியை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் (பொ) ந.வ. சுஜாத்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அவர் தம் உரையில் தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் கோபால், புதிய வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் பெயர்களைசேர்ப்பது குறித்து விளக்கமளித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.