» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பெரியநாயகம் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்!

செவ்வாய் 10, அக்டோபர் 2023 8:19:10 PM (IST)



புதுக்கோட்டையில்   டி.டி.டி.ஏ. பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை காமராஜர் தெரு, சாமி நாடார் தெரு, ஆஸ்பத்திரி தெரு பகுதியில்  டி.டி.டி.ஏ. பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியை தவமணி தேவி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன் சிறப்புரை ஆற்றினார்.

என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஜெ. திவ்யா பிரியதர்ஷினி எஸ்தர் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுவீட்லின் லீலாவதி அன்னாள் ஆனந்தக்கனி மற்றும் அந்தோணி லீனஸ் தமிழ்செல்வன் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்கள். உதவி திட்ட அலுவலர் ஜெ. ஜாய் ஞானதீபம் இராஜகுமாரி நன்றியுரை நல்கினார். 

சிறப்பு முகாமில் போதை மற்றும், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு மழைநீர் சேகரிப்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சாலைகளில், தெருக்களில், ஆலயம், கோவில் மற்றும் பள்ளிக் கூடத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory