» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் உணவு விழா

செவ்வாய் 10, அக்டோபர் 2023 4:45:01 PM (IST)



தூத்துக்குடி  தூய மரியன்னையில்  உணவு  விழா சந்தை நடந்தது. 

தூத்துக்குடி  தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை சுயநிதி பி‌ரிவு சார்பாக  மாணவர்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் செய்யும் திறனை வளர்க்கும் வகையில் "காம் மார்ட்" என்னும் தலைப்பில் உணவு  விழா மற்றும் சந்தை நடந்தது. 

கல்லூரிச் செயலாளர் சிபானா, முதல்வர் ஜெஸி பர்னாண்டோ, துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவு இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி தலைமையேற்று விழாவை துவக்கிவைத்தனர். துறை ஒருங்கிணைப்பாளர் மரிய சகாய ரோஸியானா எல்லோரையும் வரவேற்றார். இவ்விழா ஏற்பாடுகளை வணிகவியல் சுயநிதி துறை ஆசிரியர்கள் மரிய டெலிசியா ஹெலினா மற்றும் பிரிதிபா செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory