» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி மாற்கு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!

வெள்ளி 6, அக்டோபர் 2023 10:04:19 AM (IST)



நாசரேத், மூக்குப்பீரி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா திருமறையூரில் நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தி னராக தமிழ்நாட்டின் கிரீன் சாம்பியன் விருது பெற்ற கென்னடி மற்றும் அவரது குழுவினர் பங்குபெற்றனர். பனையின் மகத்துவம் குறித்து திருமறையூர் சேகர குரு  ஜாண் சாமுவேல் பேசினார். மரங்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு கற்று கொடுத்தார். மாணவர்களின் சிறப்பான பங்களிப்பை திருமறையூர் சபை மக்கள் பாராட்டினர்.

இவ்விழாவில் திருமறையூர் வளாகத்தை சுற்றிலும் பனை விதை விதைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வின் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர்  எட் வர்ட் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடு களை திட்ட அலுவலர் கோல்டா மற்றும் சேகர ஆயர் ஜாண் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory