» சினிமா » செய்திகள்

ப்ரோ டிரெய்லர் வெளியீட்டில் உணர்ச்சி வசப்பட்டது ஏன்?- சமுத்திரக்கனி விளக்கம்

புதன் 26, ஜூலை 2023 9:53:35 AM (IST)



"ப்ரோ படம் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பார்த்தபோது என்னால் பேச முடியவில்லை" என்று இயக்குநர் சமுத்திரக்கனிதெரிவித்தார்.

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, தமிழில் இயக்கிய படம், ‘விநோதய சித்தம்’. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதன் தெலுங்கு ரீமேக்கை இப்போது அவர் இயக்கியுள்ளார். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ‘ப்ரோ’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். வரும் 28-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் உணர்ச்சி வசப்பட்டார் சமுத்திரக்கனி.

அது ஏன் என்பது பற்றி அவர் கூறும்போது, ‘‘நான் தமிழில் இயக்கிய ‘விநோதய சித்தம்’ திரையரங்கில் வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள், அந்தப் படத்தை எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால், ‘புரோ’ முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பார்த்தபோது என்னால் பேச முடியவில்லை. இப்படி ஓர் ஆரவாரத்தை நான்கு வருடங்களுக்குப் பிறகு கேட்டதால் உணர்ச்சிவசப்பட்டேன். அவர்களின் சத்தத்தைக் கேட்ட பிறகு நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory