» சினிமா » செய்திகள்

50-வது வயதில் மீண்டும் தந்தையாகியுள்ளேன் : பிரபு தேவா மகிழ்ச்சி!

புதன் 14, ஜூன் 2023 12:33:23 PM (IST)

தனது 50வயது வயதில் மீண்டும் தந்தையாகி உள்ளதாக நடிகர் பிரபு தேவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

நடன இயக்குநராக இருந்து நடிகராக,  இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முன்னதாக,  பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்திருந்தவர் 

மும்பையைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் ஹிமானி சிங்கை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஹிமானி சிங்குக்கு பெண் குழந்தைப் பிறந்த செய்தி வேகமாக பரவியது. தற்போது, இதுகுறித்துப் பேசிய பிரபு தேவா, ‘என் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகியுள்ளேன். பெண் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. என் வம்சத்தில் முதல் பெண் குழந்தை. இனிமேல் குடும்பத்துடன் அதிக நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory