» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக மோடி, அமித்ஷா பெயர்களில் போலி விண்ணப்பம்!
செவ்வாய் 28, மே 2024 4:48:36 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்கள் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.
இந்த நிலையில், மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களாக கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டதால், போலிகள் அதிகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளது பிசிசிஐ.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவோம்: சிஎஸ்கே கேப்டன் தோனி நம்பிக்கை
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:23:45 AM (IST)

ஆவேஷ் கான் அசத்தல் பந்துவீச்சு: 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:03:01 PM (IST)

பெங்களூ ஆணியை வீழ்த்தியது பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
சனி 19, ஏப்ரல் 2025 10:59:07 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங்..? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:35:40 PM (IST)

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)
