» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சனி 18, மார்ச் 2023 10:51:43 AM (IST)



சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை சேப்பாக்கத்தில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவாக இந்த மைதானத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் நவீன வசதிகளுடன் கூடிய 2 பெவிலியன்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். புதிய கேலரிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார்.

தொடர்ந்து புதிய கேலரியையும் அவர் பார்வையிட்டார். கிரிக்கெட் வீரர்கள் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மொத்தமாக 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வகையில் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது. முதல் தள உள்ளரங்கில் நவீன வசதிகளுடன் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் சீல்வைக்கப்பட்ட 3 கேலரிகளை மீண்டும் திறக்க 2020ல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புனரமைக்கப்பட்ட கேலரிகளில் முதல்முறையாக வரும் 22ஆம் தேதி இந்தியா-ஆஸிதிரேலியா ஒருநாள் போட்டியை ரசிகர்கள் பார்க்கவுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory