» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க நடவடிக்கை - அமைச்சரிடம் கோரிக்கை!

வியாழன் 13, மே 2021 3:14:39 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர், அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் மேட்டுப்பட்டி சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் இது பயன்பாட்டிற்கு வராமலும், செயல்படாமலும் உள்ளது.

தற்பொழுது கொரானோ நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் சூழ்நிலையில் மையவாடி எரிவாயு தகன மேடையில் வரிசையில் காத்திருந்து இறந்தவர்களை எரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஆகவே மேட்டுப்பட்டி சுடுகாடு எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க அமைச்சர் ஆணையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

அன்புமே 23, 2021 - 09:44:25 PM | Posted IP 108.1*****

நல்லா கத்தி சொல்லுங்க.அரசு காதுகளுக்கு கேட்க்கட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory