» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:51:14 AM (IST)

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் திருப்பதியில் இருந்து புறப்பட்டு திருத்தணி சென்றனர்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், இணை ஆணையர் ஜானகி, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
கோவில் அருகில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு பிரசாதம், பூ, பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா.ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் தங்களின் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர். பட்டு வஸ்திரங்களை சுப்பிரமணியசாமி கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்று முருகனுக்கு அணிவித்தனர்.
இதையடுத்து முத்தாடா. ரவிச்சந்திரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








