» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும், தென்னை மற்றும் பனங்கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கை முடிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)








