» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உதயநிதி கைது: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:17:10 AM (IST)
பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துத் தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "ஜூலை மாதத்தில் 42 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும்; ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார்" எனப் பேசினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு கோஷம் எழுப்பவே, அதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திலும் மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார்களின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உதயநிதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)









BabuAug 4, 2026 - 02:24:27 PM | Posted IP 162.1*****