» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'சாரல் திருவிழா' கலைவாணர் அரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்விழாவைத் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இன்று தொடங்கிய இச்சாரல் திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வண்ணமயமான பண்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








