» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூங்கிக் கொண்டிருப்பது யார்? - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
வியாழன் 30, ஜூலை 2026 3:45:30 PM (IST)

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குத் தவெக அரசு காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: "தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளின் குரலுக்குத் 'தூங்குமூஞ்சி' தவெக அரசு செவிசாய்க்க மறுத்தால், மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்." என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தவெக அரசின் பதிலடி:
திமுகவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்து தவெக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில்: "மேக்கேதாட்டு அணை விவகாரம், 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல திமுக தலைமை உளறுகிறது. அப்படியெனில், தூங்கிக் கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும், தானே முதலமைச்சர் என்பது போலப் பேசுவதுதான் யதார்த்த உலகத்திலிருந்து மாறுபட்டு இருப்பது என்பதை திமுக தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம்போல ஆளே இல்லை. ஆட்சியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இயங்கியிருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை 'இன்ஆக்டிவ்' நிலைக்குத் தள்ளியிருக்க மாட்டார்களே!
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும், பதவி வெறியிலும் திமுக பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். மேக்கேதாட்டு விவகாரம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த எந்தவொரு விவகாரத்திலும் தமிழக விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்கள் பாதிக்கப்படத் தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)









PiramanayagamJul 30, 2026 - 05:35:36 PM | Posted IP 162.1*****