» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 12:16:19 PM (IST)

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், பணிகளைக் குறித்த காலத்திற்குள் தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 2-ஆம் கட்டமாக ₹63,246 கோடி செலவில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், மெட்ரோ ரயில் மூலம் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத் தலைமையகத்தில் அதிகாரிகளுடன் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி, கட்டுப்பாட்டு அறையையும் (Control Room) பார்வையிட்டார்.
நந்தனம் ஆய்வை முடித்துக் கொண்டு கிண்டி சென்ற முதலமைச்சர், கத்திப்பாரா அருகே பட்ரோட்டிலிருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரை 6 தூண்களை இணைக்கும் வகையில் 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ வளைவு ரயில் பாதையைப் பார்வையிட்டார்.1,354 அடி நீளத்தில், 101 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் இந்தச் சவாலான கட்டுமானப் பணிகளின் நிலவரம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, போரூரிலிருந்து ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அதிநவீன மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் கருத்துகள்: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைக் குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்திப்பாரா பகுதியின் பிரம்மாண்ட மெட்ரோ கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான முன்னெடுப்புகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பகல் நேரப் பணிகளுக்குப் பதிலாக இரவு நேரக் கட்டுமானப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








