» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (22). இவர் வெட்டுவெந்நியில் இயங்கி வரும் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாகச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணி நேரத்தில் மருத்துவமனையின் மாடியில் இருந்து ஆஷிகா திடீரெனக் கீழே விழுந்து பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், இதுகுறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனப் போலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








