» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: நீட் தேர்வு ஒழிப்பே தீர்வு - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

புதன் 22, ஜூலை 2026 11:05:20 AM (IST)

நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வை வழங்கும் எனத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆரம்பத்திலேயே எச்சரித்த இயக்கம் திமுக.

அதனால்தான் தொடக்கம் முதலே நீட் தேர்வை எதிர்த்து, அத்தேர்வினால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே தலைமை தாங்கி, நாட்டின் முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது. அது நீட் ஒழிப்பு மட்டுமே.

வேறு எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதே தற்போதைய போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இப் பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும். #StopNEET #SaveStudents ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் இப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory