» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!

வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

KoodankulamNPCL.jpg

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மறுத்துள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழ்நிலையில், 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற இணைய ஊடுருவலாளர் (Hacker) குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகிப்பாளர் விபரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இந்தத் தரவுக் கசிவுப் புகாரைத் தேசிய அணுசக்தி ஆணையம் மற்றும் NPCIL நிர்வாகம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், அணுமின் நிலையத்தின் கணினித் தரவுக் கசிவுப் புகாருக்கும், அணுசக்தி பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், அணு பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தரவுகள் எதுவும் வெளியேறவில்லை என்றும், முக்கியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory