» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி

வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:52:18 AM (IST)

"தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​கள் நடக்​கும் போது கனி​மொழி மவுனம் காப்​பது ஏன்​...? என்று பாஜக மாநில துணை தலை​வர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்​ளார்.

இது தொடர்​பாக சென்னை கமலால​யத்​தில் குஷ்பு செய்​தி​யாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழக முதல்​வர் தன்னை இந்த மாநிலத்​தின் ‘தந்​தை’ என்று அழைத்​துக்​கொள்ள ஆசைப்​படு​கி​றார். ஆனால், ஒரு தந்​தை​யின் முதல் கடமை தன் பிள்​ளை​களுக்​குப் பாது​காப்பு அளிப்​ப​தே. இரண்​டரை வயதுக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் அன்​றாடம் அரங்​கேறிக் கொண்​டிருக்​கும் போது, எந்​தத் தந்தை மவுன​மாக இருப்​பார்? தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடக்​கும்​போது முதல்​வர் காட்​டும் மவுனம், அவர் தன்னை ‘தந்​தை’ என்று அழைத்​துக்​கொள்​வதற்கே முரணாக இருக்​கிறது.

தமி​ழ​கத்​தில் சட்​டம் - ஒழுங்கு முற்​றி​லும் சீர்​குலைந்​துள்​ளது. விழுப்​புரம் மற்​றும் தூத்​துக்​குடி பகு​தி​களில் பெண்​களுக்கு எதி​ராக நடந்த வன்​முறை​கள் குறித்து கனி​மொழி எம்​.பி ஏன் மவுனம் காக்​கி​றார்​? கேள்வி கேட்​கத் தன் அண்​ணனைப் பார்த்து அவர் பயப்​படு​கி​றா​ரா? இதே நிகழ்​வு​கள் அதி​முக ஆட்​சி​யில் நடந்​திருந்​தால், திமுக-​வினர் வீதி​யில் இறங்​கிப் போராட்​டம் நடத்​தி​யிருப்​பார்​கள். இப்​போது ஏன் இந்த இரட்டை வேடம்? திமுக-​வினர் பெண்​களை வெறும் பாலியல் பொருளாகப் பார்ப்​ப​தால் தான், மாநிலத்​தில் பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் பெருகி வரு​கின்​றன.

பண பலத்​தால் மட்​டும் ஒரு நாடு முன்​னேறி​விட முடி​யாது. மக்​களுக்கு உண்​மை​யான நன்​மை​களைச் செய்​யும் போது​தான் வளர்ச்சி சாத்​தி​யம். ஆனால், திமுக அரசிடம் அத்​தகைய தொலை நோக்​குத் திட்​டங்​கள் எது​வும் இல்​லை. தமி​ழ​கத்​தின் கடன் சுமை ரூ.10 லட்​சம் கோடியைத் தாண்​டி​விட்​டது. ஒரு​புறம் தன்னை ‘அப்​பா’ என்று சொல்​லிக்​கொண்​டே, மறு​புறம் தமி​ழ​கம் முழு​வதும் டாஸ்​மாக் கடைகளைத் திறந்து வைத்து ஒட்​டுமொத்​தக் குடும்​பங்​களை​யும் முதல்​வர் சீரழித்​துக் கொண்​டிருக்​கி​றார்.

மக்​களின் வரிப்​பணத்​தில் பெரும்​பகு​தி​யைச் சுரண்​டி​விட்​டு, மீத​முள்ள சிறு தொகையை மக்​களுக்​குப் பிச்​சை​யாகப் போடும் நிலையே இங்கு நில​வு​கிறது. பெண்​களுக்கு மாதம் ரூ.1,000 அல்​லது 2 ஆயிரம் ரூபாய் கொடுப்​பது மட்​டும் முன்​னேற்​ற​மாகி​வி​டாது. பெண்​கள் சொந்​தக் காலில் நிற்​பதே உண்​மை​யான வளர்ச்​சி. ஆட்​சிக்கு வந்து பணம் சம்​பா​திப்​பது மட்​டுமே உங்​கள் லட்​சி​யம் என்​றால், மக்​களின் பாது​காப்​புக்கு யார் பொறுப்​பு? பதில் சொல்​லுங்​கள் முதல்​வரே. இவ்​வாறு அவர் கூறி​னார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory