» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு

புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 22-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருள்மிகு பத்திரக்காளி அம்மன் ஆலயத்தில் உலகப்புகழ் பெற்ற தூக்கத் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, திருவிழா நடைபெறும் கொல்லங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மார்ச் 22, 2026 அன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 22-ஆம் தேதி அன்று நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் கொல்லங்கோட்டில் இயங்கி வரும் 'ஹோட்டல் ஒயாசிஸ் இன்டர்நேஷனல்' மதுபான பார் ஆகியவற்றை முழுமையாக அடைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory