» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!

சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா மற்றும் துணை நடிகை நிவேதா உள்பட 9பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் சினிமா துறையினருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 'வெள்ளிமலை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சு கிருஷ்ணாவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் துணை நடிகை நிவேதா உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory