» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயனீட்டாளர்கள் சங்கம் (KKDRUA) தலைவர் எஸ்.ஆர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கடந்த செவ்வாய்கிழமை 09-12-2025 அன்று திருப்பதியிலிருந்து சீரடி சாய் நகருக்கு வாராந்திர ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த திருப்பதி - சீரடி சாய் நகர் வாராந்திர ரயில் கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த ரயிலின் கட்டணம் மிகவும் குறைவாக அனைத்து ரயில்களும் போல் இருக்கும். இது திருப்பதியிலிருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்படும் இரண்டாவது ரயில் சேவை ஆகும். தற்போது மைசூரிலிருந்து சீரடி சாய் நகருக்கு வாராந்திர ரயில், சென்னையிலிருந்து சீரடி சாய்நகருக்கு வாராந்திர ரயில் மற்றும் திருப்பதியிலிருந்து சீரடி சாய்நகருக்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் திருப்பதியிலிருந்து இரண்டாவது வாராந்திர ரயில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாய்பாபா பக்தர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தற்போது சுமார் 4000 கி.மீ தூரம் இருப்புபாதைகள் கெண்ட தமிழ்நாட்டிலிருந்து சென்னையை தவிர வேறு ஊர்களிலிருந்து நேர ரயில் சேவை கிடையாது. சென்னையிலிருந்து இயக்கப்படும் வாராந்திர ரயில் சென்னை சென்ட்ரலிருந்து இயக்கப்படுகின்றது.
ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் எழும்பூர் அல்லது தாம்பரத்துடன் நின்றுவிடுகிறது. இதனால் சாய்பாபா பக்தர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதிலும் குறிப்பாக முதியவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. தற்போது சென்னை , திருப்பதி, மைசூர்க்கு ஆகிய நகரங்களுக்கு தெற்கே எந்த ஒரு பகுதியிலிருந்து நேரடியாக சீரடி சாய்நகருக்கு செல்ல நேரடி ரயில் சேவை இல்லை. இந்த பகுதி சாய் பக்தர்கள் ஏதாவது ஒரு ரயிலில் இது போன்ற இடங்களுக்கு சென்று பின்னர் இணைப்பு ரயிலில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு நேரடி ரயில் சேவை மிகவும் குறைவாக உள்ளது என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. தற்போது கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை ரயில், வாரணாசி வாராந்திர ரயில் என்று இரண்டு ரயில்கள் மட்டுமே நேரடி தனி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி போன்ற வேறு சில ஆன்மீக இடங்களுக்கு அந்த பகுதி வழியாக ரயில்கள் இருந்தாலும் இந்த ரயில்களில் அனைத்து பயணிகள் பயணம் செய்வதால் ஆன்மீக தளங்களுக்கு என்று பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பது இல்லை. கன்னியாகுமரியிலிருந்து தனி தனி ரயிலாக ரயிலாக பூரி, திருப்பதி, உடுப்பி, துவாரகா, சீரடி, அயோத்தி, ஹரித்துவார், ரிசிகேசி, அமிர்தசரஸ், நாசிக், கயா, இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சென்னையிலிருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
சென்னை நகரத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் வசதிக்காக திருப்பதியிலிருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வாராந்திர ரயிலை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த திருப்பதி ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவ்வாறு இரண்டு ரயிலையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு இருக்க போவதில்லை.
வியாழக்கிழமையின் சிறப்பு: வியாழக்கிழமைகளில் சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானது கருதப்படுகிறது. சாய்பாபா கோவில்களில் வியாழக்கிழமை தோறும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமைகளில் சீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஆரத்தி மற்றும் அன்னதானம் நடத்தப்படுகிறது.
சாய்பாபாவே தனது கையால் பிரசாதம் கொடுப்பதாக பக்தர்களால் நம்பப்படுவதால் ஏழைகள் முதல் பணக்காரர் வரை வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் செல்கின்றனர். இந்த நாளில் நெய் தீபம் ஏற்றி சாய்பாபாவை வணங்குவது பக்தர்களுக்கு நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது, மேலும் அன்றைய தினம் சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த சென்னை சென்ட்ரல் - சீரடி சாய் நகர் ரயில் வியாழக்கிழமை செல்வதாக காலஅட்டவணை அமைத்து இயக்கப்படுவது சிறப்பு ஆகும்.
நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் காலஅட்டவணை
சென்னையிலிருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரி நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயில் செவ்வாய் கிழமை நடு இரவு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை மதியம் 13:30 மணிக்கு ஜோலார்பேட்டை சென்டடைந்துவிட்டு பின்னர் வியாழக்கிழமை காலை 10.50 மணிக்கு சீரடி சாய் நகர் சென்றடையும்.
வியாழக்கிழமை சாய்பாபா தரிசனத்தை தரிசித்து விட்டு பின்னர் அந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 05:45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்துட்டு சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்து சேருமாறு காலஅட்டவணை அமையும். என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)










