» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனமழையால் படகு சேவை ரத்து; கடலில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

திங்கள் 20, மே 2024 4:36:45 PM (IST)

குமரியில் கனமழை எதிரொலியாக கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று காலை கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. கடல் சீற்றமாகவும் காணப்பட்டது.

இருப்பினும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக வழக்கம்போல் இன்று காலை 7.45 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்தில் அமைந்து உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. கடலும் சீற்றமாக காணப்பட்டது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory