» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம்: மின்சார வாரியம் உத்தரவு

புதன் 8, மே 2024 10:46:22 AM (IST)

சாலைளில் உள்ள வேகத்தடைகளுக்கு அருகில் மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும், வேகத்தடைக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களை சற்று தள்ளி அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மின்கம்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory