» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்க கோரிக்கை!
திங்கள் 22, ஏப்ரல் 2024 12:49:34 PM (IST)
நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.
அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் தாம்பரம் காவல்நிலையத்தில் ஆஜராகி மனு அளித்தார்.