» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சலூன் கடைக்காரர் கொலையில் 3 வாலிபர்கள் கைது : பரபரப்பு தகவல்

வியாழன் 18, ஏப்ரல் 2024 8:47:09 AM (IST)

அம்பையில் சலூன் கடைக்காரர் கொலையில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் இசக்கி பாலா (வயது 25). இவர் வாகைகுளம் மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். எனவே துக்க வீட்டில் இறுதிச்சடங்கு செய்வதற்காக ராமையா, அவருடைய மகன் இசக்கி பாலா ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சரவணன் (22) என்பவருக்கும், இசக்கி பாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், இசக்கி பாலாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் சலூன் கடையில் இருந்த இசக்கி பாலாவை சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து சரவணன் மற்றும் அவருடைய நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வேம்பு சுடலை (23), முத்துக்குமார் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory