» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடிதடி, திருட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:18:18 PM (IST)

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அடிதடி, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அனைத்தலையூர், நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ன உய்க்காட்டான் (52) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் வேல்கனி கவனத்திற்கு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory