» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிகள் : ஆட்சியர் கார்த்திகேயன் ஆலோசனை

வியாழன் 11, ஏப்ரல் 2024 3:37:53 PM (IST)



திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தலில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடனான  ஆலோசனைக் கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்  மாநகர காவல் துணை ஆணையாளர்  அனிதா  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தலில்  வாக்குப்பதிவின்போது காவல் துறையினர் வாக்கச் சாவடிகளில் போதுமான பாதுகாப்புகள் அளித் திடவும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திடவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் உரிய பாதுகாப்புகள் மற்றும் பொது இடங்களில் போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கான இணைய வழி தேர்தல் பணி ஒதுக்கீடு தேர்தல் காவல் பார்வையாளர் பங்கஜ் நைன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன்  மற்றும் அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory