» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 9, ஏப்ரல் 2024 11:47:34 AM (IST)
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பதிவிற்கு பின்னர் கட்டுப்பாடுகளை தொடரக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வழிப்பறிபோல் நகை, பணத்தை பறித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர. எனவே, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தொடரக் கூடாது என்று தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.