» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசியில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி : வெடிகுண்டு சோதனை தீவிரம்!!
திங்கள் 8, ஏப்ரல் 2024 5:43:45 PM (IST)
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி தொகுதியில் வெடிகுண்டு சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வழிபாட்டு ஸ்தலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.