» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:30:32 PM (IST)

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ""தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செலவின பார்வையாளர் அறிவிக்கை சமர்பிக்க உள்ளார்.ரூ. 1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி வரையிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36.4% பூத் ஸ்லிப்கள்(தகவல் சீட்டு) வழங்கப்பட்டுள்ளது. விக்கரவாண்டி தொகுதி காலி என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory