» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லஞ்சம் வாங்கிய காவலருக்கு ஓராண்டு சிறை: நாகா்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

சனி 6, ஏப்ரல் 2024 12:17:24 PM (IST)

ரூ.300 லஞ்சம் வாங்கிய முன்னாள் தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மேற்குநெய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணப்பன் (54). இவா் கடந்த 2007 ஆம் ஆண்டு வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றினாா். அப்போது முட்டம், பிள்ளைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த எடிசன் என்பவா் தனது கடவுச்சீடடு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வந்தாா். அவரிடம் தலைமைக் காவலா் சொா்ணப்பன் ரூ.300 லஞ்சம் கேட்டாா். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத எடிசன், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அவா்களின் ஆலோசனையின்பேரில் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் இருந்த சொா்ணப்பனிடம், எடிசன் ரூ.300 லஞ்சமாக வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தலைமை காவலா் சொா்ணப்பனை கைது செய்தனா்.இதைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் சொா்ணப்பனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory