» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் எதிரொலி : மதுபானக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:09:23 PM (IST)
குமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு ஏப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2024 மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை நடைபெறுவதை முன்னிட்டு 17.04.2024 –ம் தேதி காலை 10.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 19.04.2024 நள்ளிரவு வரையும்
மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.06.2024 அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என தெரிவித்தார்.