» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:00:17 PM (IST)



சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாதம் முழுவதும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஏப்ரல் மாதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் எண் 06057 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

ரயில் எண் 06058 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

இந்த ரயில்கள் ஏப்ரல் 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory