» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் 4ல் பிறக்கும் புதிய இந்தியாவிற்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன் : கமல்

சனி 30, மார்ச் 2024 4:19:14 PM (IST)

ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்" என முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக களத்தில் பணியாற்றி, பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதற்காக தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் இன்று சேலத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர், மு.க. ஸ்டாலினுடன் உரையாடினேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்" என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

GaneshMar 30, 2024 - 07:01:26 PM | Posted IP 172.7*****

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory