» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 29-ஆம் தேதி முதல் பிரசாரம்

திங்கள் 25, மார்ச் 2024 11:21:29 AM (IST)

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் வருகிற 29ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார். 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 29-ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அவர், ஈரோடு, சேலம், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, கோவை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும், திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், திருப்பூர் தொகுதியில் களம் காணும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்தும் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

கமல்ஹாசனின் பிரசார பயண விபரம் வருமாறு:- 29-ஆம் தேதி- ஈரோடு, 30-ஆம் தேதி-சேலம், ஏப்ரல் 2-ஆம் தேதி- திருச்சி, 3-ஆம் தேதி -சிதம்பரம், 4-ஆம் தேதி- ஸ்ரீபெரும்புதூர், 7-ஆம் தேதி- சென்னை, 10-ஆம் தேதி- மதுரை, 11-ஆம் தேதி- தூத்துக்குடி, 14-ஆம் தேதி- திருப்பூர், 15-ஆம் தேதி- கோவை, 16-ஆம் தேதி- பொள்ளாச்சி. இவ்வாறு பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory