» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற: இபிஎஸ் பேச்சு!

சனி 23, மார்ச் 2024 5:12:54 PM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக்காலில் நிற்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக் காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க முக்கிய காரணம். டெல்லியில் ஊழல் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை. தவறு நடந்தால் கைது செய்யட்டும். பா.ஜ.கவுக்கு பூஜியம் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ் தற்போது அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் பா.ம.க. கூட்டணி அமைக்காத கட்சிகளே இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊழல் நிலவுகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கட்சி வளரும். நானும் ஒருகாலத்தில் புதுமுகம் தானே. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory