» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து

சனி 23, மார்ச் 2024 4:50:48 PM (IST)

தென்காசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மைப்பாறையில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி, பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory