» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி ஆணையாளர் செல்வி மா.சுகந்தி அறிவுறுத்தலின்படியும், பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர்பாஸ்கரன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களான செல்வம், செந்தில்குமார், கண்ணன், ரவிமாணிக்கம், திரு. பொன் ராமலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் இன்று "உலக குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம்” இன்று பள்ளி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வை பள்ளி முதல்வர்பிரபு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு, ஊரணித் தெரு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லலிதா மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையின் தீமைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றப்பட்டது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. "குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது வறுமைக்கு தீர்வாகாது. கல்வி மட்டுமே அவர்களின் வாழ்கையை உயர்தும் ஆயுதம்” என்று வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் "குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம், கல்வியைப் போற்றுவோம்” என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் அனைவரும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியர்கள் இந்துமதி, உமாராணி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் கோவில்பட்டி நகராட்சி தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் காளிராஜ், மாலதி, முத்துமாரி, கவிதா, பள்ளி ஆசிரியர்கள் மாரிச்சாமி, ஸ்ரீதரன், ரேகா, மகாலட்சுமி, சண்முகத்தாய், முருகேசன், உமா சங்கரி மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை மாணவிகள் அனுஜா மற்றும் தாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)









