» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” வாகனங்களை திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் வாகனங்கள் மற்றும் செயல்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இவ்ஆய்வின் போது, திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உடனிருந்து, அதிரடிப்படைப் பிரிவினருக்குப் பாதுகாப்புப் பணிகள் குறித்தப் பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
மாவட்டத்தில் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)









