» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!

வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)



பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” வாகனங்களை திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் வாகனங்கள் மற்றும் செயல்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இவ்ஆய்வின் போது, திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உடனிருந்து, அதிரடிப்படைப் பிரிவினருக்குப் பாதுகாப்புப் பணிகள் குறித்தப் பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

மாவட்டத்தில் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory