» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் : தூத்துக்குடி பொதுக்குழுவில் தீர்மானம்

வெள்ளி 12, ஜூன் 2026 3:16:03 PM (IST)



சிறுபான்மை மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கத்தின் பொதுக்குழு கூடுகை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இயக்கத்தின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத்தலைவர் பி.எம்.மோசஸ், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஜே.சாம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எங்கு பார்த்தாலும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன; இவற்றைத் தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகள்: சிறுபான்மை மக்கள், அதிலும் குறிப்பாகக் கிறிஸ்தவர்களுடைய உரிமைகள் அதிகளவில் மறுக்கப்பட்டு வருகின்றன.

ஜெபக் கூட்டங்கள் மற்றும் வீட்டுக் கூட்டங்கள் நடத்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள் 5 அல்லது 10 பேர் ஒன்றாகக் கூடினாலே மதமாற்றம் செய்ய வருகிறார்கள் என்று கூறி மதவாதிகள் தாக்கும் நிலை காணப்படுகிறது. இந்த விவகாரங்களை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், அதன் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதி, மத, இன பாகுபாடின்றி மாண்புடனும் கண்ணியத்துடனும் இயக்கத்தை வழிநடத்தவும் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் சாமிஜாண், மாநில துணைச் செயலாளர் அண்டோ மஸ்கர்ணாஸ், மாநில செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் நிக்கோலஸ் ராஜா, மாநில துணைச் செயலாளர் டாக்டர் மரிய கஸ்மிர் ராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் ரதீஷ்குமார், மாநில இணைச்செயலாளர் ஜோஸ்வா நித்தியராஜ், மாநில இளைஞரணி தலைவர் ஆனந்தன் மற்றும் மாநில மகளிரணி தலைவி சாந்தி ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெற்கு மாவட்ட மண்டலத் தலைவர் ராஜா, தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.மோசஸ், மாவட்டத் தலைவர் அமலதாஸ், வடக்கு மாவட்ட மண்டலத் தலைவர் ஏ. சிலுவை ராஜா, வடக்கு மாவட்ட மண்டல செயலாளர் ஏ. சேவியர், வடக்கு மாவட்ட மண்டல துணைத் தலைவர் ஏ.ஆரோக்யம், வடக்கு மாவட்ட மண்டல பொருளாளர் ஜேசு பாலன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தொம்மை அந்தோணி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ. சாமுவேல்ராஜா, தெற்கு மாவட்ட செய்தித்தொடர்பாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி வழக்கறிஞர் எஸ்.லூயிஷா, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அந்தோணி ராஜ் மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பர்னபாஸ் தங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

நெல்லை umaJun 13, 2026 - 08:49:52 AM | Posted IP 172.7*****

அவர் அவர் வேலையை அவர் அவர் பார்த்தால் யாரும் யாரையும் பார்க்க மாட்டார்கள் அடுத்தவர்களிடம் போய் சாமி பேய் பூதம் என்று சொன்னால் பிரச்னை நெல்லைUma

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory