» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 12, ஜூன் 2026 12:01:21 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று உலகக் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புப் பொதுக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தனது கையொப்பமிட்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாகனத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் ஒட்டுவில்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஒட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முறைப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory