» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:10:54 AM (IST)
சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கீழ நடுநாலுமூளைக்கிணறு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன் (47). இவர் கடந்த 29.05.2026 அன்று சாத்தான்குளம் பண்ணம்பாறை - திருச்செந்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நேரிட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார்.
அதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)









