» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: பூஜை காலங்களில் மாற்றம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:07:35 AM (IST)
திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதியை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் பொது விவரக்குறிப்பேடு வெளியிடுதல், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சி மக்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட ஆட்சி: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:33:51 PM (IST)

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள்: அதிமுக வேட்பாளர் அதிரடி வாக்குறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:28:15 PM (IST)

வாக்கு சேகரிக்க வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:25:02 PM (IST)

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை: 2 பஸ்கள் பறிமுதல்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:28:03 AM (IST)

வடிவேலு பாணியில் எடப்பாடி பழனிசாமி காமெடி அரசியல் செய்கிறார்: கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி.
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:21:14 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு மீது வழக்கு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:10:02 AM (IST)







