» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் உதவி மையத் தகவலால் சிக்கிய குற்றவாளி!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:48:56 AM (IST)

கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த பணிக்கர்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடுமை குறித்துக் குழந்தைகள் உதவி மையத்திற்கு (Childline) ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அந்தப் பகுதியிலும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெயமுருகனைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory