» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் தகராறு : சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:56:27 AM (IST)
நாசரேத் அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்துள்ள அகப்பை குளம் கிராமம், 12-வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெயக்குமார் (59). சமோசா வியாபாரியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஜெயக்குமார் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
ஜெயக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை அவர் மதுவிற்கே செலவழித்து வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயக்குமார், நேற்று தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் காவல் நிலையப் போலீசார், ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)

வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)








தமிழன்Apr 4, 2026 - 09:10:06 AM | Posted IP 104.2*****