» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பொட்டல்காடு கிராமத்தில், ஊரணிக்கு மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டல்காடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவரது மகன் அபிஷேக் (15). இவர் முத்தையாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து, தற்போது பொதுத்தேர்வு வருகிறார். இன்று மதியம் அபிஷேக் தனது கிராமத்தில் உள்ள ஒரு ஊரணிக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால்கள் ஊரணியில் இருந்த ஆழமான சகதியில் சிக்கிக்கொண்டன. அங்கிருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே அவர் சகதிக்குள் முழுமையாகச் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாணவனின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)







