» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேன்ஷனில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை: தூத்துக்குடியில் பரபரப்பு

சனி 21, மார்ச் 2026 3:30:01 PM (IST)

தூத்துக்குடியில் மேன்ஷனில் 5 அறைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் தனியார் மேன்ஷன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் அறைக்குத் திரும்புவது வழக்கம்.

நேற்று காலையில் வழக்கம்போல் அங்கிருந்தவர்கள் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அடுத்தடுத்து 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இவ்வாறு 5 அறைகளிலும் இருந்த பணம், லேப்டாப், பவர் பேங்க் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த மத்தியபாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மேன்ஷனில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory