» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளிவாசலில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

சனி 21, மார்ச் 2026 8:39:11 AM (IST)



தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள், அதன் நிறைவாக ஈகைத் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு தலைமை காஜி வரும் சனிக்கிழமை (மார்ச் 21) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஒரு பிரிவினர் நேற்றே பண்டிகையைக் கொண்டாடினர்.

அதன்படி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த விழாவிற்கு இமாம் அக்தர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார். அதனைத் தொடர்ந்து முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார்.

இந்தச் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்படத் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவித் தங்களது ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் அகமது இக்பால், நிர்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ் அண்ணல் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory