» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான பிளஸ்-2 மாணவி 2 மணி நேரத்தில் மீட்பு: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்!
வியாழன் 19, மார்ச் 2026 8:20:09 AM (IST)
காயல்பட்டினத்தில் மாயமான பிளஸ்-2 மாணவியை, புகார் அளிக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதச் சென்றார். தேர்வு முடிந்தும் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திலீபன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் முகிலரசன், தலைமைக் காவலர்கள் ஜெயகாந்த், வேலுமணி, பெண் தலைமைக் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ஜெபஸ்டின் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர்.
காயல்பட்டினம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவி, இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர்கள் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் துரிதமாகச் செயல்பட்டு மாணவியை மீட்டனர். வழக்குப் பதிவு செய்த இரண்டே மணி நேரத்திற்குள் மாணவி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியிலிருந்து மீட்கப்பட்ட மாணவி, நேற்று தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இன்று வியாழக்கிழமை மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அவர் மேஜர் என்பதால், சட்டப்படி அவர் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








